Monday, December 06, 2010

நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் ஓபன் ஸ்கூல்





படிக்கணும்னு ஆசைப்பட்ட நேரம் வீட்டுல வசதியில்லை. இப்போ வசதியிருக்குஆனா,இந்த வயசுல ஸ்கூல்ல சேர்க்க மாட்டாங்க. என் பிள்ளைங்களை கேட்டு படிச்சிலாம்னா நமக்கு தேர்வு யார் நடத்துவாங்க... என்று யோசிப்பவர்களா நீங்கள்?

வீட்டுல வசதி கிடையாது. குடும்பத்தை நான்தான் கவனிக்கணும். -வேலைக்கும் போயாகணும். ஆனாபடிக்கணும்னு ஆசை இருக்காகஸ்கூலாக்கோடுடோரியல் மையத்துக்கோ போகறதுக்கு நேரம் கிடையாது. ஆனால்பள்ளிப்படிப்பை முழுசும் முடிக்கணும்னு ஆசைப்படறீங்களா... உங்களுக்கான கல்வி மையம் தான் உத்திரப்பிரதேசத்திலுள்ள நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் ஓபன் ஸ்கூல். தேசிய அளவிலான இந்த கல்வி நிலையத்தில் படிக்க நாட்டில் எந் மூலையில் இருந்தாலும் விண்ணப்பிக்கலாம். இது முற்றிலம் மத்திய அரசால் அங்கீகரிக்கட்ட கல்வி நிலையம். இங்கு படித்து முடித்து கிடைக்கும் சான்றிதழை வைத்து கொண்டு நாட்டில் எந்த பல்கலைகழகத்திலும் பட்ட படிப்பை தொடரலாம்.

இந்த திறந்த நிலைபளள்ளிக்கு நாடுமுழுவுதும் பதினொரு முக்கிய நகரங்களில் மையங்கள் செய்படுகின்றன. இது தவிர - 3367 பயிற்சி மையங்கள் உள்ளன. தற்போது இந்தகல்வி நிலையத்தில் உயர்நிலைமேல்நிலை கல்வி படிப்பவர்களின் எண்ணிக்கை மட்டும் சுமார் 15 லட்சம்.

யார் யார் சேரலாம்?பள்ளியில் இடைநின்ற மாணவர்கள்பள்ளியில் படிக்காத மாணவர்கள் இங்கே தொலை நிலைக்கல்வி மூலம் படிக்கலாம். வயது 14பூர்த்தியாகியிருந்தால் போதும். இங்கே பத்தாம் வகுப்புபண்ணிரண்டாம் வகுப்பு,தொழிற்படிப்புஸ்போக்கன் இங்கிலீஷ் போன்ற தனிப்பட்ட செல்ப் இம்ப்ரூவ்மெண்ட் பயிற்சிகளும் அளிக்கபடுகின்றன. பத்தாம் வகுப்பு படிக்க விண்ணப்பிப்பவர்கள் குறைந்தபடசம் ஐந்து பாடங்களை கண்டிப்பாக படித்தாக வேண்டும். இதில் குரூப் ஏ,குரூப் பி. என்னும் இரண்டுபிரிவுகள் உள்ளன. குரூப் ஏ வில் தமிழ்தமிழ்ஆங்கிலம்,ஹிந்திஉட்பட 17 - மொழிப்பாடங்கள் உள்ளன. மாணவர்கள் விரும்பும் ஏதாவது ஒரு மொழிப்பாடத்தையோஇரண்டு மொழி பாடங்களையோ தேர்ந்தெடுத்து படிக்கலாம்.
குரூப் பி பிரிவில் கணிதம்அறிவியல்சமூக அறிவியல்பொருளியல்பிசினஸ் ஸ்டடீஸ்ஹோம் சயின்ஸ்சைக்காலஜிபோன்ற 10 பாடங்கள் உள்ளன. மேல்நிலை கல்வி பாடப்பிரிவில் இதேபோல் இரண்டு பிரிவின் கீழ் பாடங்கள் வாழங்கப்படுகின்றன. ஆனால் மேல்நிலை கல்வி படிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள்பத்தாம் வகுப்பில் கண்டிப்பாக தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எட்டாம் வகுப்புபத்தாம் வகுப்புபன்னிரண்டாம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு குறைந்த பயிற்சி கட்டணத்தில் தொழிற்கல்வி படிக்கவும் இந்த கல்வி நிலையம் வழிவகை செய்கிறது.

எட்டாம்வகுப்பு  படித்துவிட்டுகுடும்ப சூழ்நிலை காரணமாக எலக்ட்ரீஷியன்பிளம்பர்,மெக்கானிக்கல் போன்ற தொழில்களை செய்து கொண்டு இருப்பவர்களுக்கு தங்கள் தொழில்  சார்ந்த சான்றிதழ் இருக்காது. அதனால் அவர்கள் கடைசிவரை அரசுப் பணிக்கோபொதுத்துறை நிறுவனங்களுக்கோ பணிக்கு செல்ல முடியாது. ஆனால் இந்த  கல்வி நிலையத்தில் திறந்த நிலை படிப்பாக ஆறு மாத பயிற்சிஒரு ஆண்டுப் பயிற்சி மற்றும் குறைந்த வார பயிற்சிகளாக  பல தொழிற்கல்வி பயிற்சி அளிக்கப்படுகிறது.

ஏற்கனவே தொழில் தெரிந்திருக்கும் மாணவர்களும்தொழில் அறிவு இல்லாத மாணவர்களும் இந்த  பயிற்சியில் சேர்ந்து படிக்கலாம். இரண்டாண்டு பயிற்சியாக டிப்ளமோ இன் ரேடியோலாஜி படிப்பு கற்று கொடுக்கப்படுகிறது. இப்படிப்புக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் கண்டிப்பாக பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இது தவிர கிராம சுகாதாரம்,  மகளிர்  மேம்பாடு குறித்த சான்றிதழ் பயிற்சி அளிக்கப்படுகின்றன. இப்படிப்புக்கு விண்ணப்பிக்க நான்காம் வகுப்பு படித்திருந்தால்போதுமானது. இது தவிர ஆறு மாத கால பயிற்சியாக  எலக்ட்ரிக்கல்,மோட்டார் ரீவைண்டிங்ரேடியோ பழுதுபார்த்தல்உடை தயாரித்தல்அழகு பயிற்சி போன்றவை கற்று தரப்படுகின்றன. இந்த பயற்சிக்கு எட்டாம் வகுப்பு படித்திருந்தால் போதுமானது. இதே போல டி.டி.பி. மற்றும் கணினி ஹார்டுவேர் மாத பயிற்சி பெற மாணவர்கள் குறைந்தபட்சம் பன்னிரண்டாம் வகுப்பு படித்திருக்க வேண்டும். குறைந்த கட்டணம்நிறைந்த கல்விகல்வி நிலையங்களுக்கு சென்று படிக்க வேண்டியதில்லை. புத்தகங்கள் உங்கள் வீடு தேடி வரும். வேலைவாய்ப்பு அதிகமுள்ள தொழிற்கல்வி,இவை அனைத்தையும் மொத்தமாக வழங்கும் சிறந்தஒரு திறந்தவெளி பள்ளியாக செயல்படுகிறது --------------------------
நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் ஓபன் ஸ்கூல். 

Link: 
As received from email